மிட்டாய் கவிதைகள்!

அவளேயென் தோழி!

July 22, 2013

friendship

பேசாத பலநாட்களில்
பிணமாகத் தானிருந்தேன், 

மூச்சான அவள்பேச்சால்
மீண்டு(ம்) நான்பிறந்தேன், 

விலகிச் சென்றபோது
விட்டுப்போன கண்ணீர்த்துளி, 

சிட்டாய் திரும்பியபோது
சிரிக்கிறது கண்ணோரம்! 

புரிந்துகொள் பிரிவே
கூடிய காதலுடன் ஒருத்தி
காத்துக் கொண்டிருப்பாள்
அவளேயென் தோழி!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்